Wednesday, February 9, 2011

முள்


உனது
கூர்மை
சற்று குறைவாய் இருந்திருந்தால்

உன்னைப் பற்றி

எழுதியிருக்க மாட்டேன்


மலரின் பின்புறம்

மறைந்து கொண்டிருக்காவிடில்

உன்னைத் தீண்டியிருக்க மாட்டேன்


இப்போதெல்லாம் மலரைவிட
உன்னையே எனக்கு

அதிகம் பிடிக்கிறது


உனது நோக்கம்
வெளிப்படையானது

வாசமும் வண்ணமும்

அவசியமில்லை அதற்கு


மிக அருகிலிருந்தும்

மலரின் உட்புறம்

அறிய இயலாதவர்கள்
நீயும் நானும் தான்

2 comments:

Unknown said...

என்ன கவிஞரே!

எத்தனை மலர் பறித்தீர்?

இவ்வளவு காயம்....

Rajesh V said...

மலர் ஏதும் பறிக்கவில்லைங்க முத்து.. :)
எப்போ கத்துக்க போறேன்னு தெரியல.. பறிக்க நினைப்பதை விட்டுவிட்டு ரசிக்க ...

Post a Comment