Tuesday, September 7, 2010

சில குறுங்கவிதைகள்


உடையப் போவதறியாமல்

வேகமாய் மேலெழும்

நீர்க்குமிழிகள்

அவள் குறித்த என் ஆசைகள்


---------------------------------------------

என்னை முந்திச் செல்பவர்களைப் பற்றி
எனக்கு கவலையேதுமில்லை

நான் ஏற்கெனவே

தவறான பாதையில் செல்கிறேன்

---------------------------------------------

அழத்தோன்றும் தனிமையில்
தூரத்தில் பார்வை நிலையிட
வரிசையிலிருந்து தொலைந்த
எறும்பின் வாடியமுகம்

நினைவினில் வந்தது..

சொல்ல மறந்துவிட்டேனே
என் தனிமைக்கொரு சிறப்புண்டு
அது என்னைத் தவிர

வேறு யாரையும் துன்புறுத்துவதில்லை


---------------------------------------------

நீர்ச்சுழலில் சிக்கிய இலையை
அண்ணாந்து பார்த்ததொரு மீன்
தண்ணீரில் வாழும் மீனுக்கு
தவறி விழுதலைப் பற்றி
தெரிய வாய்ப்பில்லை

2 comments:

theAIcapital said...

Wow!!! very unique. And the last one about the fish, GOD!, amazing.

Rajesh V said...

thanks kalai :)

Post a Comment