Wednesday, March 2, 2011

மழையில் நனையும் மாடு

திறந்த வெளி -
ஆழமாய்ப் பதித்த இரும்பாணியில்
கட்டிவிட்டு
மேய்ப்பவன் ஒருவன்
மறந்து போனான் மாட்டை

சோ..வெனப் பெய்யும் மழையில்
புல் மேய்வதை மறந்து
இப்படியும் அப்படியுமாய்
தலை கொண்டு இழுத்ததில்
மூக்கணாங்கயிறு உராய
வந்தது இரத்தம்

செய்வதறியாது திகைத்து
இன்னும் இழுக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
ஒதுங்குமிடம் ஏதுமில்லை
என உணராமல்.