Friday, April 16, 2010

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்...


அறுப்பு முடிந்த வயற்காட்டில்
அவள் கைபிடித்து ஓடியபோது
காலில் விழுந்த கீறல்களெல்லாம்
இன்றும் தெரிகின்றன
இன்பத்தின் நினைவுகளாய்....

---------------------------------------

என் நெஞ்சமரத்தின் மேல்
கல்லெறிந்தாள் - ஆங்கே
அமர்ந்திருந்த எண்ணப் பறவைகளெல்லாம்
எங்கோ பறந்தோடிப் போயின..
இப்போது கல்லை மட்டும்
வெறித்து பார்த்தவாறு
நிற்கிறது இந்த மரம்.

--------------------------------------

2 comments:

Vijay said...

thala

theAIcapital said...

Awesome. Loved it.

Post a Comment