Tuesday, January 18, 2011

யாரேனும் ..

என் எண்ணங்களை
யாரேனும்
எடுத்துக் கொள்ளுங்கள்

பிடுங்காமல் விடப்பட்ட
குத்துக்கத்தியின் காயம்
கூடவே வந்து
அசையும் போதெல்லாம்
குருதி கசியும் வேதனை

என்மனம்
அவள்கை ஆயுதமானதில்
வியப்பில்லை
அவளுக்காக எதுவும்
செய்யுமென
அறிந்தே இருந்தேன்

தனியாய்த் தொங்கும் புழுவின்
கேளாக் கதறலென
மீண்டும் கேட்கிறேன்

என் எண்ணங்களை
யாரேனும்...