Wednesday, June 1, 2011

நலம் புனைந்துரைத்தல்

நீ
துள்ளி குதிப்பது
கொள்ளை அழகுதான்..
இருந்தாலும்
இருநொடிகள் பிரிவுத் துயரம் பூமிக்கு

-----------------------------------------------------
உனது காதலன்
கொடுத்து வைத்தவன்
என்னைப் போல்
கவிதை எழுதிக் கொண்டிருக்காமல்
கவிதையை வாசிப்பான்

----------------------------------------------------
நிறைய பாத்திரங்களில்
மழைநீர் பிடிப்பது போன்றது
உன்னுடன் பேசுதல்.
மேகத்தையே எனக்கு வழங்கிவிடேன்!!

------------------------------------------------------
புதுப் புது கிளிஞ்சல்களை
தோடுகளாக அணிந்துகொள்
உனது கூந்தலின் அலைவுகள்
ஏமாற்றட்டும் என்னை.

------------------------------------------------------
------------------------------------------------------
வேறு

நாம் இருவரும்
ஒரே பட்டாம்பூச்சியை
துரத்துகிறோம்
அது சில சமயம் முட்களிலும்
சில சமயம் பூக்களிலும் அமர்கிறது
இன்பம் பூச்சியிடமோ பூக்களிடமோ இல்லை
ஒன்றாய்த் துரத்துவதில் உள்ளது

-------------------------------------------------------
சில பறவைகள்
தாங்கள் அமரும் மரங்களுக்கு
இறக்கைகளை தந்துவிடுகின்றன
மரமும் பறக்கப் போவதில்லை
பறவையும்...
-------------------------------------------------------

0 comments:

Post a Comment