Thursday, May 13, 2010

நீர்வாழ் நட்பு


கிணற்று நீரின்
குளிர்ச்சிக்கு அஞ்சி
கால்களை மட்டும் நனைத்தவாறு
படிக்கட்டில் உட்கார்ந்த வேளை..

பாதத்தின் அசைவுகள் நின்றதால்
ஆபத்தில்லை யென எண்ணி
என் கால் விரல்களில்
முகத்தை மோதின சில மீன்கள்.

நான் நகராமல் இருந்ததற்கு
கால்கள் சுத்தமானது மட்டும்
காரணம் அல்ல..

என் கால்களை முத்தமிடும்
மீன்களையா விலக்குவது?

அந்த மீன்களின் தூரத்து உறவுகள்
இங்கேயும் இருக்கலாம் என்றெண்ணி
என் கல்லூரி நீச்சல் குளத்தில்
நேற்று கால் நனைத்தேன்.

கால்கள் கூசும் படியாய்
ஏதும் நிகழவில்லை
மறுநாள் சற்று கறுத்திருந்தன கால்கள்
குளோரின் படிந்ததாய்க் கூறினார்கள்.


2 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான வரிகள்

Rajesh V said...

@ வெறும்பய
நன்றி !.... :)

Post a Comment