Tuesday, February 8, 2011

இன்னும் சில


தெய்வங்களே ! உங்களுக்கு

பிடிக்காதவற்றையே
நான் செய்கிறேன்.
பிடித்தவற்றை எல்லாம்
நீங்களே செய்து கொள்ளுங்கள்

----------------------------------------------------------

நிழலுக்காகத்தான் நிற்கிறேன்
இருந்தாலும்
இலைகளின் இடையே
ஒழுகும் வெயிலை
ரசிப்பதாகி விடுகிறது

------------------------------------------------------------

சாலையோரச் செடிகளே
புழுதி படிவதாய்
புகார் கூறவேண்டாம்
பழகிவிடும் உங்களுக்கு

-----------------------------------------------------------

தலையணை யோரம்
சாரையாய் ஊர்ந்து செல்லும்
செவ்வெறும்புகளை சலிக்காமல்
பார்த்துக் கொண்டே இருக்கலாம்
பார்த்துக் கொண்டே இருக்கவும் வேண்டும்

1 comments:

p said...

2nd one.. i like :)

Post a Comment